சென்னையில் 10 நாட்களில் 72 ரவுடிகள் கைது
சென்னை:
சென்னையில் போலீஸாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக நகரில் கடந்த 10 நாட்களில் 72 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முத்துக்கருப்பன் பேசுகையில்,சென்னை நகரில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
போலீஸாரின் இந்த நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களில் 72 ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். வடக்கு மற்றும்மத்திய சென்னைப் பகுதிகளில் ரவுடிகள் அதிக அளவில் உள்ளனர். இந்தப் பகுதிகளில் புதன்கிழமை ஒரு வழக்குக்கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் மீன்பாடி வண்டிகள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
பின்னர் திருடு போன வாடகைக் கார் ஒன்றை வெகு விரைவில் கண்டுபிடித்து மீட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு(சி.பி.சி.ஐ.டி.) முத்துக்கருப்பன் பரிசு வழங்கினார்.












Click it and Unblock the Notifications