கோவையில் தமிழாய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் தமிழ் ஆய்வு மையம் விரைவில் துவங்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தின் உறுப்பினர்களாக தமிழ்ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கோவையில் உள்ள இலக்கிய திறனாய்வு குழவின் சார்பாக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்,கோவையில் தமிழ் ஆய்வு மையம் ஒன்றைத் துவங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு இந்தஆய்வு மையம் துவங்கப்படும். பின்னர் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.
மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே தமிழ் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதலே இந்த ஆய்வுமையத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், தமிழை ஆய்வு செய்து, பயனுள்ள தகவல்களைத் திரட்டி வெளியிடுதல்போன்ற பணியும் மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications