கருணாநிதியை சந்தித்தார் திருமாவளவன்
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாளவன் சென்னையில்,புதன்கிழமை சந்தித்தார்.
சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி வழக்கம்போல் புதன்கிழமை மதியம் வந்திருந்தார்.
அப்போது அங்கு திடீரென விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும்,தலைவருமான திருமாவளவன்வந்தார். அவர் கருணாநிதி இருந்த அறைத்கு சென்று அவரை சந்தித்தார்..
கருணாநிதி, திருமாவளவன் சந்திப்பு 15 நிமிடநேரம் நீடித்தது. அதன் பின் திருமாவளவன் கருணாநிதியுடன்வெளியே வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த சந்திப்பு குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கட்சிநிர்வாகிகள் தெரிவித்தனர்.