சென்னையில் ரயில் குடிநீர் விநியோகம் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்த குடிநீர் விநியோகம் சென்னை நகரில் வியாழக்கிழமை துவங்கியது.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம், ஈரோட்டிலிருந்து ரயில்மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஈரோட்டு ரயில் குடிநீர் புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தது. இந்த தண்ணீர் ரயில் வில்லிவாக்கம் ரயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த தண்ணீரை கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணிவியாழக்கிழமை காலை துவங்கியது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜு இந்தப் பணியைத் துவக்கி வைத்தார். கீழ்ப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் பின்னர் லாரிகள் மூலம் நகரில் விநியோகம் செய்யப்படும்.
அக்டோபர் மாதம் வரை இந்த குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications