கல்லூரி ஆசிரியர் டிரான்ஸ்பர்: ஜூன் 26ல் கவுன்சலிங்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்கள் டிரான்ஸ்பருக்கான கவுன்சலிங் ஜூன் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் எம். அனந்த நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 26: மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும் கவுன்சலிங்கிற்கு, மதுரை மற்றும்திருநெல்வேலி மண்டல அரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்டுள்ளவர்கள் வர வேண்டும்.
ஜூன் 27: திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் நடக்கும் கவுன்சிலிங்கில், திருச்சி மண்டல அரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர்கேட்டவர்கள் வர வேண்டும்.
ஜூன் 28: கோயம்புத்தூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் கவுன்சலிங் நடக்கும். கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ளஅரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்ட ஆசிரியர்கள் இங்கு வர வேண்டும்.
ஜூன் 29: சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் டிரான்ஸ்பர் கேட்டுள்ள ஆசிரியர்கள், சென்னை வெலிங்டன் சீமாட்டிகல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டும்.
ஜூன் 30: கவுன்சிலிங்கால் ஏற்படக்கூடிய காலி இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் சென்னையில் நடக்கும். ஏற்கனவேகவுன்சலிங்கிற்கு வந்தவர்கள் மட்டும் இதற்கு வர முடியும்.
காலை 9 மணிக்கு அனைத்து கவுன்சலிங்கும் ஆரம்பமாகும். டிரான்ஸ்பர் விண்ணப்பம், கணவர், மனைவி பணிபுரிபவராயின்அதற்கான சான்றிதழ், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றவராகஇருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன், இவற்றிற்கான நகல்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.