சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது
சென்னை:
சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அந்த வாலிபரின் பெயர் ரோஸ் விக்டர். இவர் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.
சென்னை அடையாறில் உள்ள ஒரு தியேட்டரின் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில், அருகில் நின்று கொண்டிருந்தஒரு பெண்ணைப் பார்த்து தன்னுடைய குறும்பு வேலையை ஆரம்பித்தார்.
முதலில் மெதுவாக ஒரு பிளையிங் கிஸ்ஸை அந்தப் பெண்ணிடம் அனுப்பினார். முறைத்துப் பார்த்த பெண்ணைப்பின்னர் மெதுவாக அழைத்தார். இவருடைய தொந்தரவைத் தாங்க முடியாத அந்தப் பெண், அருகிலிருந்தபோலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் உடனடியாக அவரைக் கைது செய்து அவர் மேல் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர்.
அவர் பல பேருக்கு போன் செய்வதாகவும், அவ்வாறு போன் செய்யும் போது, எதிர்முனையில் ஏதாவது பெண்கள்வந்தால் அவர்களிடம் ஆபாசமாகப் பேசுவது வழக்கம் என்றும் விசாரணையின் போது ரோஸ் விக்டர் ஒப்புக்கொண்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications