வீரப்பனை நான் சரணடைய செய்வேன்: கூட்டாளி பேட்டி
கோவை:
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளித்தால் அவரைச் சரணடையச் செய்கிறோம் என வீரப்பன் கூட்டாளி மணிகண்டன்தெரிவித்தார்.
வெள்ளித் திருப்பூரில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன், சத்திய மூர்த்தி, முத்துக்குமார், ராஜூ, மகாலிங்கம்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் சேலம், திருச்சி மத்திய சிறைகளில் உள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தனி நீதிமன்றத்திற்கு இந்த வெள்ளித் திருப்பூர் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்குத் தொடர்பாக மணிகண்டன் உட்பட 6 பேர் கோவை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள்இந்தவழக்கில் ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கு வரும் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், வெளியே வந்த அவர்கள், போலீஸ் வேனில் இருந்தபடியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையினர் தேவாரம் தலைமையில் மீண்டும் அந்தப் பணியைத் தொடங்கியுள்ளனர். தேவாரம்மீது முன்பே பல மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் உள்ளன. எனவே, அவரை நியமித்திருக்கக் கூடாது.
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதாக அரசு உறுதியளித்தால், நாங்கள் சென்று அவரை அழைத்து வருவோம். கொளத்தூர்மணியைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் மணிகண்டன்.












Click it and Unblock the Notifications