நாடார் சங்க பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
போத்தனூர்:
தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கோவை மாவட்ட பொருளாளர் படு கொலை செய்யப்பட்டார்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் செல்லதுரை (42). இவர் தமிழக வியாபாரிகள் சங்கத்தின் கோவை மாவட்டப்பொருளாளராக இருந்தார். மேலும், நாடார் சங்கத்தின் பொதுச் செயலராகவும் செயல்பட்டு வந்தார்.
அவர் செவ்வாயன்று இரவு ராமநாதபுரத்திலிருந்து போத்தனூருக்கு சைக்களில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப்பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications