போராட்டம் நடத்திய திமுக தலைவர்கள் கூண்டோடு கைது
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியபல தி.மு.க. தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இதைஎதிர்த்து பல தி.மு.க. தலைவர்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள்அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் முன்னாள் தமிழக மேயர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மதுரை நகர மேயர்குழந்தைவேலு, கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியனும், தூத்துக்குடியில் பெரியசாமியும் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாமரைக்கனி கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை போலீசார்அடித்து இழுத்துச் சென்றனர்.
கோயம்புத்தூரில் முன்னாள் எம்.எல்,ஏ. பொங்கலூர் பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார்.
முன்ளாள் அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க, எம்.எல்.ஏ.மைதீன்கான் ஆகியோரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்னமும் தமிழகத்தில் பல இடங்களிலும் போராட்டம் நடந்துவருகிறது. எல்லாஇடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்னர். தமிழகத்தில் கடும் பதட்டம் நிலவிவருகிறது












Click it and Unblock the Notifications