அமைதியாக நடக்கிறது பந்த்
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை பந்த் அமைதியாக நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள்இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதுவரை பந்த் அமைதியாகவே நடந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மாநிலம் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. சாலைப் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது.
திமுக கூட்டணியும் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொள்ளும் பந்த் என்பதால், மாநிலம் முழுவதும் போலீஸ்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
சென்னையிலும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் போலீஸ் வாகனங்களில் போலீஸார்ரோந்து சுற்றி வருகின்றனர். இவை தவிர, சாலைப் போக்குவரத்து முழுவதுமாகத் தடைபட்டுள்ளது.
இருப்பினும், ஓரிரண்டு கல்லூரிகள் திறக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி, இதுவரை எந்தவிதமானஅசம்பாவிதமும் நடக்கவில்லை என்று போலீஸ் கூறுகிறது.












Click it and Unblock the Notifications