வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை நடக்கும் பந்த்தின் போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது, கண்டதும் சுட உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவரையும், கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் மாறன்,டி.ஆர். பாலு ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும், திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் பந்த் கடைபிடிக்கவுள்ளதாக அறிவித்தன.
ஆனால், இந்த பந்த்துக்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. மாநிலம் முழுவதும் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், பலஇடங்களில் கடைகள் திறந்திருந்தன. முக்கியமான பெரிய கடைகள் கூட திறக்கப்பட்டிருந்தன.
கண்டதும் சுட உத்தரவு:
பொது வாழ்க்கைக்கு இடையூறு செய்யும் வன்முறையாளர்கள் மீது கண்டதும் சுடுவதற்கு போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பால், தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் சாலைப் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கம் போலவே வாகனங்கள்ஓடிக் கொண்டிருக்கின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அனைத்து ரயில்களும் குறித்த நேரத்திற்குப் புறப்பட்டன. ரயில்மறியல் பற்றி இதுவரை எந்த செய்தியும் வரவில்லை.
மாநிலம் முழுவதும் பள்ளி, அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. ஆனாலும், மாணவர்கள்-அலுவலர்கள் வருகைமிகவும் குறைவாகவே இருந்தது. அரசு அலுவலகங்களில் கூட, பாதிக்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்திருந்தனர்.
இந்த பந்த்தினால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. வன்முறைச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் இதுவரை செய்திஇல்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications