மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வாஜ்பாய் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடக்க இருந்த2வது மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா அல்லது மாநில அரசின் செயல்பாடுகளை முழுமையாகத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதா என்பது குறித்து மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமைச்சர் அருண்ஷோரிஆகியோர் இந்திய அரசியல் சட்டத்தின் 355 வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசின் செயல்பாடுகளை மத்திய அரசின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாகச் செயல்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்என்று கூறுகின்றனர்.

ஆனால், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் சரத் யாதவ் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்தில்இந்திய அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

அத்வானிக்காக ஒத்திவைப்பு:

இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளார். அவர் இல்லாத நிலையில்தமிழக அரசு தொடர்பாக முக்கிய முடிவு எதையும் எடுக்க வாஜ்பாய் யோசித்து வருகிறார்.

அவரது வருகைக்காகத் தான் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவர் வந்தவுடன் மத்திய அமைச்சரவை கூடி ஜெயலலிதா அரசு மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துமுடிவெடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+