கருணாநிதி விடுதலை: "மனிதாபிமானம் காரணமல்ல, பயம்தான் காரணம்
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியை தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது தனக்கு மிகவும்மகிழ்ச்சியளிப்பதாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மனிதாபிமான முறையில் கருணாநிதியை விடுதலை செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தமனிதாபிமானம், அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்து அவரைக் கையை முறுக்கி இழுத்து கைதுசெய்தபோதே வந்திருக்க வேண்டும்.
திடீரென்று மனிதாபிமானம் எப்படி வரும்? மத்திய அரசு கூடி விவாதித்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்தகாரணத்தால்தான், அவர்கள் கருணாநிதியை விடுவித்திருக்கிறார்கள். எப்படியோ, கருணாநிதியை விடுவித்ததுசந்தோஷமளிக்கிறது என்றார் தயாளு அம்மாள்.
கருணாநிதியின் மகன் அழகிரி கூறுகையில், மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால்தான் உடனடியாக அப்பாவைவிடுதலை செய்திருக்கிறார்கள். ஆட்சி பறிபோய் விடுமோ என்ற பயத்தாலும், சம்பாதிக்க வேண்டும் என்றஎண்ணத்தாலும்தான் அவர்கள் மத்திய அரசு உத்தரவுக்கு அடி பணிந்திருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications