இது கருணாநிதி என்ற தனி மனிதனுக்கு நடந்த கொடுமையல்ல...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீசாரால் தான் தாக்கப்பட்டது, கருணாநிதி என்ற தனி மனிதனுக்கு நடந்த கொடுமை அல்ல. ஒட்டுமொத்தமனித குலத்தின் உரிமைக்கு நடந்துள்ள கொடுமை என கருணாநிதி கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

என்னை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பல மாநிலமுதல்வர்கள், பத்திரிக்கைகள், தொண்டர்கள், பல கட்சித் தலைவர்கள், ஜெயலலிதா கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீதான தாக்குதல் அகில இந்திய, உலகம் தழுவிய பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது.

எனக்கு விழுந்த அடியின் வலி இன்னும் குறையவில்லை. வேதனை குறையவில்லை.

நடந்தது என்ன?

29ம் தேதி இரவு கனிமொழி எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு 12 மணிக்குத் தான் தூங்கினேன். திடீரென 2மணிக்கு என் மனைவி ராஜாத்தி படுக்கை அறைக்கு ஓடி வந்தார். போலீஸ் வந்திருக்கு என்றார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோதே போலீஸ்காரர்களும் படுக்கையறைக்குள் வந்தனர்.

வரும்போது ஹாலின் தாழ்பாளை உடைத்திருக்கிறார்கள். வந்த போலீசார் எல்லோருமே தடித்தடியாய்இருந்தார்கள்.

உங்களை கைது பண்றோம் வாங்க என்றனர். ஏம்பா, கைது செய்ய முறை இல்லையா, வாரண்ட் இருக்கா என்றேன்.அதெல்லாம் இல்லை நீங்க வாங்க என்றனர்.

இதையடுத்து மாறனுக்கு போன் செய்ய முயன்றேன். ஆனால், போன் வயர்களை போலீஸ் கீழேதுண்டித்துவிட்டிருந்தனர். நல்லவேலை செல்போன் இருந்ததால் மாறனைத் தொடர்பு கொண்டு தகவலைச்சொன்னேன்.

பின்னர் போலீசிடம் நான் வெறும் கைலியுடன் இருக்கிறேன். அண்டர்வேர் போட்டுக் கொள்கிறேன், சட்டைப்போட்டுக் கொண்டு வருகிறேன் என்றேன்.

நான் அண்டர்வேர் போட முயன்றபோது அங்கு நின்றிருந்த 2 பெண் போலீஸ்களும் விலகவில்லை. இதையடுத்துஎனது மனைவியும் மகளும் ஒரு போர்வையால் என்னை மறைத்துக் கொண்டனர். பிறகு தான் அண்டர்வேர் கூடபோட முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+