ஜாமீன் மனுக்களை எதிர்க்க வேண்டாம்: தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்களுக்கு தமிழக அரசு எதிர்ப்புதெரிவிக்கக் கூடாது என்று அரசு வக்கீலுக்கு முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.

ரூ.12 கோடி மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர்.இவர் தன்னை ஜாமீனில் விடும்படி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், அரசுவழக்கறிஞர் கோமதி நாயகத்திடம் கூறும்போது:

ஒரு குற்றவாளி ஜாமீன் மனுத் தாக்கல் செய்யும்போது அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தில், மாநில அரசு தனக்கு சாதகமான முடிவுகளைப் பெறும் வகையில் நீதிமன்றத்தில் வாதாடநினைத்தால், நீதிமன்றமும் தனக்கு சாதகமான வகையில் நடந்து கொள்ளும். இது மாநில அரசுக்குத் தான்தேவையில்லாத பிரச்சனைகளைக் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் பல விஷயங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

மேம்பால ஊழல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது போலீஸார் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு நீதிபதி அசோக்குமார் கூறினார். நீதிபதி அசோக்குமார் கருணாநிதியை அரசு நடத்திய விதம் குறித்துதனது கடும் கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளார். போலீசாரையும் அவர் ஒரு பிடி பிடித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+