For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதான அதிகாரிகளுக்கு அமோக ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் மற்றும்இன்ஜினியர் சீனிவாசனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

சென்னை நகரில் சிறு மேம்பாலங்கள் கட்டியதில் ரூ. 12 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள்முதல்வர் கருணாநிதி, சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார் மற்றும் மாநகராட்சி இன்ஜினியர் டாக்டர்சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் அரசுப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீனிவாசன். உலக அளவில் சிறந்தபொறியாளராக அறியப்பட்டவர். வெளிநாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 1994ம் ஆண்டு தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோதுபோக்குவரத்து சீரமைப்பு தொடர்பாக பல ஆலோசனைகளை அளித்துள்ளார்.

1997ம் ஆண்டு சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக உயர்மட்டப் பரிசீலனை குழுவும்,போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டபோது, அதில் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நம்பியாரும் சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர். அப்பழுக்கற்றவர் என்று அனைவராலும்புகழப்பட்டவர். அவர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

நம்பியார் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் பிரதிநிதிகள் 15 பேர் அடங்கிய குழு தமிழக தலைமைச் செயலாளர்சங்கரைச் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

தமிழக பிற்பட்டோர் நலத்துறை செயலாளரும், சங்க தற்காலிக தலைவருமான ஆதிமூலம் இக்குழுவிற்குத் தலைமைவகித்தார்.

மாநகராட்சி கமிஷனராக ஆச்சார்யலு பதவியேற்று ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி அவருக்கு பாலஊழல் குறித்து அத்தனை விவரங்களும் தெரிந்தன? அவர் பால வேலைகள் குறித்த ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்ளவே சில காலம் தேவைப்படும்.

இந்த நிலையில் அவர் நம்பியார் மீது புகார் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் சங்கரிடம்தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையை கேட்டுக் கொண்ட சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இனிஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X