தண்ணீர்! .. தண்ணீர்!! ..
சென்னையைப் பொருத்தவரை குடிநீர்ப் பிரச்சினை என்பது எப்போதாவது வரும் பிரச்சினை அல்ல. ஆண்டுமுழுவதும் குடிநீருக்குத் தட்டுப்பாடுதான். அதற்குப் பல காரணங்கள். முக்கிய காரணம் நாட்டை கவனிக்கநேரமில்லாத பழிவாங்கல் அரசியல்.
பரந்து விரிந்த ஒரு மிகப் பெரிய நிகரம் சென்னை. எங்கு நோக்கினும் காங்க்ரீட் கட்டிடங்கள், மண்ணைப்பார்ப்பதும், மரங்களைப் பார்ப்பதும் மிகவும் அரிதாகி விட்டது.
இத்தனை பெரிய நகராக இருந்தாலும் கூட அதற்கேற்ற குடிநீர் வசதிகள், வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்பதேஇந்தப் பிரச்சினைக்கு மிகப் பெரிய காரணம்.
கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் வசிக்கும் நகரம் சென்னை. இதுதவிர சென்னைக்கு தினசரி வந்து செல்வோரின்எண்ணிக்கை மட்டுமே 40 லட்சம்.
2002ம் ஆண்டில் சென்னை நகரின் குடிநீர் தேவை தினசரி 1294 மில்லியன் லிட்டராக இருக்கும். அதாவது 16.8டிஎம்.சி அளவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்தஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
ஆனால், தற்போது சென்னை நகரில் வினியோகம் செய்யப்படும் நீரின் அளவு ஒவ்வொரு குடிமகனுக்கும் வெறும்40 முதல் 50 லிட்டர்தான்.
சென்னைக் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இதுவரை இருந்த மாநில அரசுகள் பல திட்டங்களைக் கொண்டுவந்து பார்த்தன. ஆனால் எதுவும் பிரயோஜனப்படவில்லை.
வீராணம் திட்டம், தெலுங்கு கங்கை திட்டம் என பல திட்டங்கள் பலன் தராமலேயே உள்ளன. வீராணம் திட்டம்நிறைவேற்றப்படவேயில்லை. தெலுங்கை கங்கைத் திட்டத்தில் ஆந்திரத்திடம் 500 கோடிக்கும் மேல் கொடுத்துவிட்டு தண்ணீருக்குக் கெஞ்சிக் கொண்டுள்ளோம்.












Click it and Unblock the Notifications