நெல்லையிலிருந்தும் ரயில் மூலம் குடிநீர்
சென்னை:
சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க திருநெல்வேலியிலிருந்தும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை ஆரம்பித்ததிலிருந்தே, தண்ணீர் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறதுசென்னை மாநகர். நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் என்று பல இடங்களிலும் இருந்து சென்னைக்கு தண்ணீர்"இறக்குமதி" செய்யப்பட்டு வருகிறது.
இதனால், திருநெல்வேலியிலிருந்தும் தண்ணீரை "இறக்குமதி" செய்ய தமிழக அரசு தற்போது முடிவெடுத்துள்ளது.சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால், அங்குள்ள ஏரிகள் அனைத்தும்நிரம்பி வழியத் துவங்கியுள்ளன.
இப்படி வீணாகும் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வந்தால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தஆரம்பித்துள்ளது தமிழக அரசு. திருநெல்வேலியிலிருந்து ரயில்கள் மூலமாகவே தண்ணீரைக் கொண்டு வருவதற்குஅரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே, சென்னையின் 100 குடிசைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டவும் அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 19ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவடையும் என்று தமிழகஅரசு கூறியுள்ளது.
மேலும், சென்னை நகர குடிநீர்ப் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்காக, புதிய வீராணம் திட்டத்திற்கும் தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.720 கோடி மதிப்பில், அடுத்த ஓராண்டுக்குள் செயல்படுத்தப் படவிருக்கும்இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் 18 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.