அமெரிக்காவின் பொருளாதார தடை விரைவில் நீக்கம்?
வாஷிங்டன்:
போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்தபொருளாதார தடைமறுபரிசீலனை செய்யப்படும் என்று தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் கிறிஸ்டினா ரோக்கோகூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசின் உறவில்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுக்கு வந்ததையடுத்து அமெரிக்க அரசின் துணைச் செயலாளர்அர்மிட்டாக் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
புதிய பாதுகாப்புக் கொள்கை பற்றி அவர் விளக்கியதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் வல்லமையை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் 2 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை இன்னும் பெருக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கானசூழ்நிலை இந்தியாவில் இன்னும் உருவாக வில்லை.
மேலும் 50 ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ராவில் நடத்தியபேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான தீர்வைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.