பா.ம.க. வுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்குஅமைச்சர் பதவிகள் வழங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பா.ம.க. மீண்டும் கூட்டணியில் சேர விரும்புவதாக அவர்களிடம் தெரிவித்தனர். பா.ம.கவினரின் வேண்டுகோளைஏற்று மீண்டும் அக்கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர் பிரதமரும் ஜார்ஜும்.
இது குறித்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறியதாவது:
பா.ம.க. மீண்டும் கூட்டணியில் இணைவதை பிரதமர் வரவேற்றார். எந்தவித நிபந்தைனையும் விதிக்காமல்அக்கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்துள்ளோம்.
பா.ம.க.வும் அமைச்சர் பதவிகள் எதையும் கேட்கவில்லை. ஆனால், அவர்கள் முழு மனதுடன் மீண்டும்கூட்டணியில் இணைவதாகத் தெரிவித்தனர் என்றார் ஜார்ஜ்.
முன்பு தே.ஜ. கூட்டணியில் பா.ம.க. இருந்தபோது, இக்கட்சியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் பொன்னுசாமி ஆகிய 2பேரும் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.
இப்போது மீண்டும் 2 அமைச்சர் பதவிகளை பா.ம.க. வுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.வரும் அக்டோபர் மாதம் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பா.ம.க.விலிருந்து 2 பேருக்கு அமைச்சர் பதவிவழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமைச்சர் பதவி எத்தனைபேருக்கு வழங்குவது, யாருக்கு வழங்குவது என்பதை பிரதமர் வாஜ்பாய்தான் முடிவெடுப்பார்" என்றார்.
இதன் மூலம், இந்த 2 பேருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லைஎன்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications