இலங்கை டெஸ்ட்: மீண்டு(ம்) வருகிறார் டெண்டுல்கர்
மும்பை:
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டில் விளையாடவிருக்கும் இந்திய அணியினர் வியாழக்கிழமைஅறிவிக்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர், மீண்டும் இந்திய அணியில் சேர்கிறார். ஆகஸ்டு 10ம் தேதி அவருக்கு மேலும் ஒரு முக்கியமானஸ்கேன் சிகிச்சை நடைபெறவுள்ளது.
அப்போதும் அவர் விளையாடுவதற்குத் தேவையான உடல் தகுதியைப் பெறாவிட்டால், அவருக்குப் பதிலாக,ஜேக்கப் மார்ட்டின் என்ற வீரர் இந்திய அணியில் இறக்கப்படுவார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெங்கடேச பிரசாத் இந்திய அணியில் இடம் பெறுகிறார்.
தற்போது இந்திய அணியில் கலக்கலாக விளையாடிக் கொண்டிருக்கும் ஷேவாக், லக்ஷ்மண், நேஹ்ரா, யுவராஜ் சிங்ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தூக்கி எறியப் பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, குரேசியா, சோதி, அகர்கர் மற்றும் மொஹந்தி ஆகியோரும் 5ம் தேதியுடன் இலங்கையிலிருந்துபெட்டி, படுக்கையைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
இவர்களுக்குப் பதிலாக, தாஸ், கைஃப், ஸ்ரீநாத், பகுதுலே, ஹர்விந்தர் சிங், ரமேஷ் மற்றும் மோங்கியா ஆகியோர்டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கவுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ள ஷேவாக், வியாழக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரானஒருநாள் போட்டியில், தன்னுடைய முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.