ஜெ. முதல்வரானதை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் முதால்வராக நீடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

டான்சி நிலத்தை வாங்கிய ஜெயலலிதா, சசிகலா உட்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவழங்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே" ஓட்டல் வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுதண்டனை வழங்கப்பட்டது.

இதனால் கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஜெயலலிதா எந்த அடிப்படையில் முதல்வர் பதவிவகித்துவருகிறார் என்ற விளக்கம் கோரியும், அவர் முதல்வராக நீடிப்பதைத் தடுத்து உத்தரவிடக் கோரியும், பி.ஆர்.கபூர் என்ற வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

இவர், சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த மிக முக்கியமான தீர்ப்பான, 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏவாகத்தேர்ந்தெடுக்கப்படாதவர் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்ற தீர்ப்பை இந்த மனுவில் மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய"அரசியலமைப்பு பெஞ்ச்" முன்பு விசாரணைக்கு வருகிறது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணையின் தீர்ப்பை தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்துஅரசியல்வாதிகளுமே பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+