ஒரே குழியில் புதைக்கப்பட்ட சாவிலும் பிரியாத தம்பதி
திண்டுக்கல்:
65 ஆண்டு காலம் ஒற்றுமையுடன் வாழ்ந்து, ஒரே நேரத்தில் இறந்த தம்பதியர் உடல்கள் ஒரே குழியில்புதைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் , பெரும்பாறை அருகே உள்ள கிராமம் கவியகாடு. இங்கு வாாழ்ந்து வந்தவர்கள்சிவனாண்டி (90) - பேச்சியம்மாள் (80) தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி 65 ஆண்டுகாலம் ஆகிறது. திருமணமான நாள் முதல் இவர்களும் பிரிந்ததேகிடையாது. இவர்களிடையே சிறு சண்டை கூட வந்தது கிடையாது. எங்கு சென்றாலும இருவரும் சேர்ந்தேசெல்வார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரந்ததே கிடையாது.
சில ஆண்டுகள் மகள் வீட்டில் தங்கியிருந்துவிட்டு சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை பேச்சியம்மாள் திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனைஅடைந்த சிவனாண்டி, அடுத்த நிமிடமே மனைவி உடலருகில் மயங்கி விழுந்து இறந்து போனார்.
அவர்களை பிரிக்க விரும்பாத அவர்கள் உறவினர். அவர்கள் இருவரையும் ஒரே குழியில் புதைத்தனர். வாழ்வில்மட்டுமல்லாது சாவிலும் பிரியாத இந்த தம்பதியின் உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.