வெளிநாடு சென்று துன்புறும் தமிழர்களைக் காப்பாற்ற ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வேலைக்காக சென்று, அங்கு சித்திரவதைக்குள்ளாகும் தமிழர்களைக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கள் விவசாய நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் இதுபோன்ற வேலைகளுக்கு ஏற்பாடு செய்து தரும்ஏஜென்டுகளிடம் ரூ. 1 லட்சம், 2 லட்சம் எனக் கொடுத்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குதமிழ்நாட்டிலிருந்து சிலர் வேலைக்குச் செல்கிறார்கள்.
அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற கனவோடுதான் அவர்கள் அங்கு போகிறார்கள். ஆனால் அங்கு போனவுடன்தான்தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரிய வருகிறது.
தற்போது மலேசியாவில் 5,000 தமிழர்களும், சிங்கப்பூரில் 3,000 தமிழர்களும் இப்படி ஏமாற்றப்பட்டு அங்குள்ளபோலீஸாரால் பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். மலேசிய சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள சுமார் 2,000 தமிழர்களுக்கு மன நோய் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் அங்கு கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர்.எட்டு மணி நேர வேலை, 1,000 வெள்ளி சம்பளம் என்று பேசி அழைத்துச் செல்லப்படும் அவர்கள் அதன்படிவேலை வாங்கப்படுவதில்லை.
500 வெள்ளி வரைதான் அவர்களுக்கு அதிகபட்சம் சம்பளம் தரப்படுகிறது. தினசரி குறைந்தது 15 மணி நேரம்வரை அவர்கள் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டும்.
இதுபோன்று தவிக்கும் தமிழர்களையும், சிறையில் வாடும் தமிழர்களையும், தமிழ்ப் பெண்களையும் உடனடியாகவிடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, இதுபோன்ற மோசடி ஏஜென்சிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ராமதாஸ்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications