சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து சென்னையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய போலீஸார் தூதரகத்திற்கு எதிரேயுள்ள அண்ணா மேம்பாலத்தில் பாதுகாப்பு கவசம்பொருத்தப்பட்ட வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் புதன்கிழமைமூடப்பட்டுள்ளது.
இதுதவிர, கலவரக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்தப்படும் நீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமான வஜ்ராவும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் தவிர சென்னையின் முக்கிய இடங்களான எல்.ஐ.சி. கட்டடம், எழும்பூர் ரயில் நிலையம்,பாரிமுனை பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் பல்வேறு அரசுக் கட்டிடங்களுக்கும் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் துப்பாக்கிகளுடன் ரோந்து சுற்றிவருகின்றனர். கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தரும் பாதுகாப்பை விடகூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் தவிர கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications