For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு உதவி: முடிவெடுக்க அவகாசம் கேட்கிறது பாக்.

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவுவது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் எனபாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தவும் பின் லேடனைப் பிடிக்கவும் பாகிஸ்தான் உதவ வேண்டும் என அமெரிக்காகூறியுள்ளது. முதலில் நிச்சயம் உதவுவோம் என்று கூறிய பாகிஸ்தான் இப்போது பின்வாங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு உதவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தானை தீவிரவாத அமைப்புகள் மிரட்டியுள்ளதால்இப்போது பாகிஸ்தான் அரசு பின் வாங்கி வருவதாகத் தெரிகிறது. இந்தத் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியதும்அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து வளர்த்ததும் பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தத்து.

இப்போது இந்த அமைப்புகளே பாகிஸ்தானை மிரட்ட ஆரம்பித்துள்ளன.

பர்வேஸ் முஷாரபுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுப்பிய கடிதத்தில், உடனடியாக தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவிவழங்குவதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும் என்று எச்சரித்திருந்தார். மேலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையைஉடனே மூடுமாறும் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்ப உடனே ஆப்கன் எல்லையில் படைகளை குவித்தது பாகிஸ்தான். தனது உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்கு எல்லா வகையிலும் உதவுவோம்என்று அறிவித்தார்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் மீது தான் அமெரிக்க விமானங்கள் பறக்கும் என்று அமெரிக்க அரசுகூறியது. இதை பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர் பாதுகாப்புத்துறை ஜெனரல் ஒருவர் மூலம் பாகிஸ்தானுக்குகடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அமெரிக்கபோர் விமானங்கள் பாகிஸ்தான் மீது பறக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என பாகிஸ்தான்கூறியுள்ளது. இப்போது வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல்மெஹ்மூத் அகமத் கால அவகாசம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அனுமதி தராவிட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும், அனுமதி தந்தால் உள்நாட்டில் உள்ள தீவிரவாதஅமைப்புகளிடம் இருந்து பிரச்சனை வரும் என்பதால் குழம்பிப் போய் உள்ளது பாகிஸ்தான்.

எப்படியாவது தீவிரவாத அமைப்புகளை சமாதானம் செய்து அமெரிக்காவுக்கு அனுமதி தரப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X