ஆணையத்தைக் கூட்டக் கோருகிறார் ஜெ.
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றமுடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக அம்மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவும் முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும் என்று கோரிஅவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் பொன்முடி எழுந்து, "சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது காவிரிப்பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடருவோம் என்று செய்தியாளர்களிடம் முதல்வர்தெரிவித்தது தவறு" என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "செய்தியாளர்கள் கூட்டத்திற்கு முன்பு நடந்த அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இதுகுறித்து நான் தெரிவித்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications