பால்கனி இடிந்து மளிகைக் கடைக்காரர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்து மளிகைக் கடைக்காரர் பலியானார்.
இந் நிலையில் காலையில் எழுந்த வஜ்ரவேலு, வீட்டுக்கு வெளியே நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பால்கனிஇடிந்து விழுந்தது. இதில் வஜ்ரவேலு தலை நசுங்கி அங்கேயே இறந்தார்.
வஜ்ரவேலு மளிகைக்கடை நடத்தி வந்தார். கடைக்குச் சென்றிருந்த வஜ்ரவேலுவின் மனைவி அனுசூயா வீடு திரும்பியபோதுபால்கனி இடிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
இடிபாடுகளுக்குள் கணவர் நசுங்கிக் கிடந்ததை பார்த்ததும் அவர் அலறியடித்து அக்கம் பக்கத்தில் இருந்தோரைக் கூப்பிட்டார்.ஆனால் இடிபாடுகளை அகற்றி வஜ்ரவேலுவை மீட்டபோது அவர் உயிருடன் இல்லை.












Click it and Unblock the Notifications