For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபரேஷன் நடந்தவுடன் மாணவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே திருத்தணியில் காது வலிக்காக ஆபரேஷன் செய்யப்பட்ட மாணவர்சிகிச்சைக்குப் பிறகு இறந்தார்.

திருத்தணியிலுள்ள வேலஞ்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கோபி. 22 வயதாகும் இவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு சிலநாட்களாக காதில் வலி இருந்து வந்தது. இதையடுத்து சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் ஆபரேஷன் நடந்த சில மணிநேரத்திலேயே கோபி இறந்து விட்டார். இதையடுத்து மோகன், தனது மகனைவேலஞ்சேரிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தார். பிறகு பூக்கடை போலீஸ்நிலையத்தில், தனது மகனுக்கு தவறாக ஆபரேஷன் நடந்து விட்டதால் அவர்இறந்ததாக புகார் கொடுத்தார்.

இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X