பதவி பறிப்பு: 3 பேர் தற்கொலை- ஜெ. அறிக்கை
சென்னை:
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானதைத் தொடர்ந்து 1 பெண் உட் பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நான் வகித்துவந்த முதல்வர் பதவி ரத்தானதைத் தொடர்ந்து அதிமுகத் தொண்டர்கள் தீக்குளித்தல் போன்ற காரியங்களில்இறங்குவது என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனைபெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதையடுதது ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். இதனால் மதுரையைச் சேர்ந்த சேதுராமன் என்பவர்தீக்குளித்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மேலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரம்யா என்றமாணவியும் தீக்குளித்து மரணமடைமந்தார். முருகன் என்ற மற்றொரு தொண்டர் விஷம் அருந்தி மரணமடைந்தார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எனது பதவி பறிப்பு பற்றிய செய்தி அறிந்தவுடன் கழக உடன்பிறப்புக்கள் தீக்குளித்தல், விஷம் அருந்துததல் போன் காரியங்களில்இறங்கியுள்ளனர். இதுபோன்ற காரியங்களில் கழக உடன்பிறப்புக்கள் இறங்குவது என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.எனவே யாரும் இனி இவ்வாறு செய்யவேண்டாம்.
எனக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. விரைவில் நான் குற்றமற்றவள் என்பதை கோர்ட் மூலம் நிரூபித்து, மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்பேன் என்றார்.
தற்கொலை செய்துகொண்ட சேதுராமன், ரம்யா மற்றும் முருகன் ஆகியோர் குடம்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.50,000உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications