பெஞ்ச்சில் 2 நீதிபதிகள் அளித்த தனித்தனித் தீர்ப்புகள்
டெல்லி:
ஜெயலலிதாவை தமிழக முதல்வராக நியமித்ததற்காக கவர்னரை கேள்விகேட்க முடியாது என்று ஒரு நீதிபதியும், மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்திலேயே குறைபாடகள் உள்ளது என்று ஒரு நீதிபதியும் தீர்ப்புக் கூறியுள்ளனர்.
இதுகுறித்த வழக்கை நீதிபதிகள் பரூச்சா, பட்நாயக், பிரிஜேஷ் குமார், ரூமாபால் மற்றும் சபர்வால் ஆகிய 5 நீதிபகள் அடங்கியபெஞ்ச் விசாரித்தது.
இவர்களில் 2 நீதிபதிகள் தாங்கள் கூறிய தனித்தனி தீர்ப்புகளில் கூறியிருப்பதாவது,
நீதிபதி பிரிஜேஷ் குமார்:
இந்த வழக்கில் ஜெயலலிதாவை தல்வராக நியமித்துள்ளார் கவர்னர். அவர் தனது கடமையைத் தா"ன் செய்துள்ளார். எனவே அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்திய அரசியல் சட்டம் 361 வது பிரிவின்படி, ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தது குறித்து கவர்னரிடம் கேள்விகேட்கமுடியாது.
ஆனால் மக்கள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல என்று கூறினார்.
நீதிபதி பட்நாயக்:
பிரதிநிதித்துவச் சட்டம் 8(3) வது பிரிவின் படி ,
ஊழல் செய்ததற்காக ஒருவர் ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றிருந்தாலும், எம்.எல்.ஏவாகவோ,எம்.பியாகவோ இருந்து 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றிருந்தாலும் அவர் அமைச்சராவதில் எந்தபிரச்சனையும் இல்லை.
ஊழல் குற்றம் செய்தவர்களை தகுதி இழப்பு செய்வது குறித்த, இந்தச் சட்டப்பிரிவு குறித்து பாராளுமன்றத்தில்விவாதித்து, ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டிய தருணம் என்றார் அவர்.
இந்த 2 நீதிபதிகளும் மற்ற 3 நீதிபதிகள் கூறியுள்ள தீர்ப்புக்கு சற்று மாறான கருத்துக்களைக் கூறியிருந்தாலும்,பெரும்பாலான நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
பிறகு ஒருமனதாக ஒட்டுமொத்த நீதிபதிகளின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications