பாகிஸ்தான் எல்லையருகே பின் லேடன் பதுங்கல்?
மாஸ்கோ:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஜலாலாபாத்தில்பதுங்கியிருப்பதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசு மறுத்துவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் ஆப்கனைத்தாக்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.
பின் லேடன் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று தங்களுக்குத்தெரியவில்லை என்றும் தலிபன் அறிவித்தது. ஆனால் இதை நம்புவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.
இந்நிலையில், பின் லேடன் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஆப்கன் நகரமான ஜலாலாபாத் பகுதியில்பதுங்கியிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் இடார்-டாஸ் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், இங்கிருந்தவாறே தலிபன் படைகளுக்கு தலைமையேற்று பதில்தாக்குதலை பின் லேடன் நடத்தக்கூடும் என்றும் அந்நிறுவனம் கூறியது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான தலிபன் தூதர் அப்துல் சலாம் ஜயீப் கூறுகையில், "ஓசமா பின் லேடன்எங்கிருக்கிறார் என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.