கோவையில் 2 தலை, 4 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 2 தலையுடன் அதிசய குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் காங்கயத்தில் காமராஜர் தெருவில் வசித்து வரும் ஜோதீசுவரன்-சுப்புலட்சுமி தம்பதிகளுக்குஇந்த அதிசய குழந்தை பிறந்தது.
ஜோதீசுவரன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். கர்ப்பிணியான சுப்புலட்சுமியை, பிரசவ காலம் வந்தவுடன்கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ஜோதீசுவரன்.
அங்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு அதிசயமாக 2 தலைகளும், 4கைகளும், 2 கால்களும் இருந்தன.
அந்த குழந்தையின் எடை 4 கிலோ இருந்தது. ஆனாலும் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த அதிசய பெண்குழந்தை இறந்து விட்டது.












Click it and Unblock the Notifications