கம்போடி-யாவிலிருந்து ஆயுதங்கள் வாங்கும் புலிகள்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் கம்-போ-டியா நாட்டிலிலிருந்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்துவருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு கடல் மார்க்கமாக ஆயுதங்கள் செல்வதைத் தடுக்கஇந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட ரோந்து படகுகள் மூலம் இலங்கை கடற் படையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு கம்--போ-டியா நாட்டிலிருந்து ஆயுதங்கள்வந்துள்ளன. ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கடற்புலிகளுக்கு தேவையான பலஆயுதங்களும் கம்-போ-டியாவிலிருந்து வந்துள்ளது.
இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பையும் மீறி புலிகள் இந்த ஆயுதங்களைதங்கள் பகுதிக்குள் சாமர்த்தியமாகக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த ஆயுதங்களில் ஒரு பகுதி முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுஎனவும் தெரியவந்துள்ளது.
கடும் தாக்குதலுக்கு தயாராகும் புலிகள்:
சில தி-னங்-க--ளுக்-கு முன்--பு வன்னி பகுதியில் கண்ணி வெடியில் சிக்கி விடுதலைப்புலிகள்இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கர் பலியானார். இவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உறவினர்.
இவரை கண்ணி வெடி வைத்து ராணுவத்தினர் கொன்றுவிட்டதாக விடுதலைப் புலிகள்குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பழி வாங்கும் விதமாக தீவிரமான தாக்குதலில்விடுதலைப்புலிகள் ஈடுபடாலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சங்கர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிலிருக்கும்பகுதியில் பிரபாகரன் நெருக்கடி நிலையை பிரகடனப்படுதியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை சுட்டுக் கொல்லுமாறு துணைதளபதி செல்லவராஜுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்து உதவி செய்த 5 பேரை புலிகள்கைது செய்து தூக்கில் போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.