கம்யூனிஸ்டுக்கு மதுரை மாநகராட்சியை விட்டுத் தர காங்கிரஸ் தயார்
சென்னை:
காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தால் அதற்கு மதுரை மாநகராட்சியை விட்டுத்தரதயாராக இருக்கிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுநிருபர்களுக்குப் பேட்டியளித்த ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளையும், நகராட்சிகளையும் கலைக்க மாநில அரசுக்கும், மாவட்டக்கலெக்டருக்கும் அளிக்கப்பட்டுள்ளஅதிகாரம் நீக்கப்படவேண்டும். இதற்கு மாறாக நீதிபதிகள் கொண்ட குழுவிற்குஅந்த அதிகாரத்தை வழங்கலாம்.
இந்த தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிககளுக்கும் பொதுவான தேர்தல்அறிக்கைதான்.
எங்கள் கூட்டணியில் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தால், அந்தக் கட்சிக்கு மதுரை மாநகராட்சிமேயர் பதவி மற்றும் வேறு சில இடங்களையும் பகிர்ந்தளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேலும் தமிழ் நாட்டில் நாங்கள் தனி அணி அமைத்துப் போட்டியிட்டாலும், பாண்டிச்சேரியில் அதிமுகவுடன்தொடர்ந்து கூட்டணி நீடிக்கும். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications