For Daily Alerts
Just In
தயார் நிலையில் இந்தியப் படைகள்
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியிருப்பதையடுத்து இந்தியத் துணைக் கண்டத்தில் பதற்றம் நிலவுவதால் இந்தியவிமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியப் பெருங்கடலிலும் அரேபியக் கடலிலும் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடப்பதால் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக இந்தியா கருதுகிறது. இதையடுத்துஜம்மூ-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, October 8, 2001, 5:30 [IST]