தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
மாவட்ட வருவாய் அதிகாரிகள் (டி.ஆர்.ஓ) பலரை தமிழக அரசு திடீரென்று பணிமாற்றம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதிலுமுள்ள டி.ஆர்.ஓக்கள் பலரை தமிழக அரசு திடீரென பணிமாற்றம் செய்துள்ளது.அவர்களுக்கான மாறுதல் உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் சங்கர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)பிறப்பித்தார்.
பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள டி.ஆர்.ஓக்களின் பணி மாற்ற விவரம்:
திருச்சி சிவில் சப்ளைசின் மண்டல மேலாளர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்துள்ள நிலையில் அவர் அதேபதவியில் தொடர்ந்து நீடிப்பார்.
ஈரோடு, தாராபுரம் கூட்டுறவு நூற்பு ஆலைய நிர்வாகி,கோயம்புத்தூர் டாஸ்மார்க்கின் சீனியர் மண்டல மேலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் இதுவரை இருந்து வந்தவர் சென்னையிலுள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்தின் முதன்மைவருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம், -பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தவர் சென்னை தமிழக கூட்டுறவு பால்உற்பத்தியாளர் கூட்டமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளநிலையில், அவர் நில நிர்வாகத்துறையின் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாகத்துறையின் இணைக் கமிஷனராக பணியாற்றி வந்தவர், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரைஆலையின் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் டி.அர்.ஒ.வாக பணியாற்றி வந்தவர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்சென்னை நில தீர்வாய டி.ஆர்.ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கடலூர் பிரிவு தனி டி.ஆர்.ஓவாக பணியாற்றி வந்தவர் விடுமுறை முடிந்துதிரும்பி வந்துள்ள நிலையில்,அவர் பவானிசாகர் சிவில் சப்ளைஸ் பயிற்சி மையத்தின் முதல்வராகநியமிக்கப்பட்டுள்ளார்.
பவானிசாகர் சிவில் சப்ளைஸ் சர்வீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக பணியாற்றி வந்தவர் ஆதிதிராவிடர்வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் விடுமுறை முடிந்து பணிக்குதிரும்பியுள்ள நிலையில் அவர் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராகநியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications