For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை குண்டு வெடிப்புக்கு திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்- த.மா.கா. புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து முன் கூட்டியே உளவுத்துறை தகவல் கொடுத்தும் கூட திமுக அரசு அலட்சியமாகஇருந்த காரணத்தால்தான் குண்டுவெடிப்புகள் நடந்தன என தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க் கட்சித்தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.

கோவையில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில்1988ம் ஆண்டு மிகப் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும், விஷமிகளின் சதிச் செயல் குறித்தும் உளவுத்துறை போலீஸார் அப்போதைய திமுகஆட்சிக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து அப்போதைய பிரதமர் குஜ்ரால் தமிழக முதல்வருக்கும்,அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அப்போதைய திமுகஆட்சி அலட்சியமாக இருந்துவிட்டது. இதன் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கோயம்புத்தூர் வந்தபோது தொடர் குண்டுவெடிப்புகள்நடந்தது. இதனால் பல உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து கருணாநிதி தான் முதல்வராக இருந்தபோது இதுபோன்ற கடிதம் வந்துள்ளதா என்று பார்த்து, அதற்கானநடவடிக்கையை எடுத்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிடட்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் கோவை மாநகராட்சியில் தமாகாவினரின் செயல்பாடுகள் மக்கள் மனதில் இன்னும் நிற்கின்றன. எனவேஇந்த முறையும் மாநகராட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சியான அதிமுக எளிதில் வெற்றி பெறும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X