சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா போர் தொடங்கியது. விமானங்கள் மூலம்ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது அமெரிக்கா. இதையடுத்து இந்தியாவின் முக்கியநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
சென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தைகடத்தப்போவதாகவும் வந்த தகவல்களையடுத்து சென்னை விமான நிலையத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள், பார்வையாளர்கள் அனைவரும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில்போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் குறித்து, செங்கல்பட்டு டி.ஐ.ஜி, விமான நிலையபோலீஸ் துணை கமிஷனர் ஆகியோரிடம் தமிழக போலீஸ் ஐ.ஜி. பாலச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூடுதல் பாதுகாப்பு பணிகளை போலீசார் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துஅவர்களுக்கு பாலச்சந்திரன் அறிவுரை கூறினார்.












Click it and Unblock the Notifications