முஷாரப்-தலிபான் தலைவர் சந்திப்பை தடுத்த ஐ.எஸ்.ஐ.
இஸ்லாமாபாத்:
தலிபான் தலைவர் முல்லா முகம்மத் ஒமருக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் நடக்க இருந்தசந்திப்பை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் தடுத்துவிட்டார் என்ற விவரம்இப்போது வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாபரைஅமெரிக்கா நெருக்கியது. இதையடுத்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால், இரு வாரங்களுக்கு முன் இவர் தான் பாகிஸ்தான் சார்பாக ஆப்கானதான் சென்று அமெரிக்காவின்கோரிக்கை (பின் லேடனை ஒப்படைப்பது) குறித்து தலிபான்களுடன் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தாக்குதலை தவிர்க்க முயற்சி செய்வதாகக் கூறி மெஹ்மூதைத் தான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைத்தார் பர்வேஸ் முஷாரப்.
ஆனால், இரண்டு முறை ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் தலைவர் முல்லா ஒமரை சந்தித்துவிட்டுத் திரும்பியஅவர் பின் லேடனை ஒப்படைக்க அவர்கள் மறுப்பதாகக் கூறினார்.
இதையடுத்து முல்லா ஒமரை தானே நேரில் சென்று சந்திக்க பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டார்.ஆனால், ஒமர்-முஷாரப் சந்திப்பை மெஹ்மூத் திட்டமிட்டுக் கெடுத்துவிட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
அதிபர் முஷாரப் இப்போதுள்ள சூழ்நிலையில் தலிபானளின் தலைமையகமான காண்டஹார் செல்வதைத்தவிர்க்கவேண்டும் என்று ஐ.எஸ்.ஐ. தலைவர் என்ற முறையில் வலியுறுத்தியுள்ளார். தலிபான் தலைவர் முல்லாஉமரை முஷாரப் சந்திப்பதை இவர் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
அப்படியே முஷாரப் ஆப்கானிஸ்தான் சென்றாலும் கூட முல்லா உமரைச் சந்திக்கக் கூடாது என்றும், அந் நாட்டுஉள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதரைத் தான் சந்திக்க வேண்டும் என்றும் மெஹ்மூத் கூறியதாகத் தெரிகிறது.இதன்மூலம் எந்த நிலையிலும் முல்லா உமருடன், முஷாரப் நேருக்கு நேர் சந்திப்பதை அவர் விரும்பவில்லைஎன்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஐ.எஸ்.ஐ. அனுமதியுடன் தான் முஷாரப் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சமீபகாலமாகவே முஷாரப்-மெஹ்மூத் மோதல் இருந்து வந்துள்ளது. ஆனால், ஐ.எஸ்.ஐ. தலைவர்களை அந் நாட்டுராணுவ ஆட்சியாளர்கள கூட கேள்வி கேட்க முடிந்தது இல்லை. அந்த அளவுக்கு சுதந்திரத்தோடும்அதிகாரத்தோடும் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆட்சியைப் பிடித்தவுடன் மெஹ்மூதுக்கு முஷாரப் ராணுவப் பணிக்குழுவின் இணைத் தலைவர் பதவியைஅளித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டு, தன்னை ராணுவத் துணைத் தலைவராக்கக் கோரி முஷாரபிடம்வற்புறுத்தியுள்ளார். முஷாரப் தன்னை இரண்டாம் கட்டத் தலைவராக்கப் பார்க்கிறார் என்று எண்ணியிருக்கிறார்.
மேலும் அமெரிக்கா சென்றபோது இவர், அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் தவறான முறையில் நடந்துள்ளார்.
மேலும் இவர் ஒரு அதிகப்பிரசங்கி என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் வட்டத்தில் பேசப்படுவதுண்டு.












Click it and Unblock the Notifications