விஷச் சாராய சம்பவம் - 10 பேர் பார்வை இழந்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே கோட்டூரில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது என்றுஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவீந்திரநாத் கூறினார்.

சென்னைக்கு அருகே உள்ள கோட்டூரில் கடந்த சனிக்கிழமை விசச்சாராயம் அருந்தியவர்களில் ஆண்களும்பெண்களுமாக 36 பேர் பலியானார்கள்.

இவர்களில் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லிமருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இவர்களில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10 பேருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது என்றுஅம்மருத்துவவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரநாத் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

ஸ்டான்லி மருத்துவமனைக்கு இதுவரை 74 பேர் சிகிச்சை பெவதற்காக வந்துள்ளனர். அவர்களில் 21 பேர் சிகிச்சைபலனளிக்காமல் மரணமடைந்துவிட்டனர்.

மேலும் 10 பேருக்கு கண்பார்வை மங்கிவிட்டது. இவர்களில் 8 பேருக்கு முழுவதுமாக கண் பார்வை போய்விட்டது.2 பேருக்கு பாதி பார்வை மட்டுடே உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் இவர்களில்பெரும்பாலானவர்களுக்கு கண்பார்வை காப்பாற்றப்பட்டுள்ளது.

விஷச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் என்ற ரசாயணத்தை அவர்கள் குடித்ததால் இந்தக் கண்பார்வைக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மெதில் புரெடைசான் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, கண்பார்வைக்குசிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+