தலிபான் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன - நார்தர்ன் அலையன்ஸ்
லண்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று நார்தர்ன்அலையன்ஸ் பிரிவினரின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா கூறினார்.
இந்நிலையில் தலிபான்களின் படைகளில் பணியாற்றிய 40 தளபதிகள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் நார்தர்ன்அலையன்ஸ் பிரிவில் இணைந்துள்ளனர். இதனால் தலிபான்கள் பலம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் தலிபான்கள் ஆட்சி முடிவுக்குவந்துவிடும் என்று அப்துல்லா அப்துல்லா கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கான் வம்சாவழி மக்களையும், இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்களையும்இணைத்து ஒரு தேசிய அரசு அமைக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
ஆப்கான் ஆப்கானியர்களுக்குத் தான் என்ற கொள்கையைக் கடைபிடித்து அனைத்து ஆப்கானியர்களும் ஒன்றாகஇணையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இது நிறைவேற நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும என்று கருதுகிறேன்.
ஆப்கான் மக்களின் சுயஉரிமையைப் பாதுகாக்க அவர்கள் தலிபான்களிடம் இருந்து எதிர்பார்ப்பதைவிடஅதிகமாக நாங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். மேலும் ஐ.நா. சபையில் நாங்களும் பங்குபெறதயாராகிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.