எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான்-தலிபான் கடும் துப்பாக்கிச் சண்டை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புகளுக்கும் தலிபான்படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் டொர்மாண்டியில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டை 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.
பாகிஸ்தான் தரப்பில் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை என்று கூறும் அதிகாரிகள், எத்தனை தலிபான்கள்இறந்தனர் என்பது பற்றிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர்.
நாவா பாஸ் என்ற எல்லைப் பகுதியிலும் பாகிஸ்தான்-தலிபான் படையினருக்கிடையே கடும் துப்பாக்கிச் சண்டைநடந்ததாகக் கூறப்படுகிறது.
மதவாதிகள் போராட்டம் தீவிரம்
இதற்கிடையே பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய மதவாதிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் உச்சக்கட்டத்தைஎட்டியுள்ளது.
ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்தும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கோலின்போவெல் பாகிஸ்தானுக்கு வருவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
"போவெல் இங்கு வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றதாகும். மேலும் அவருடைய கால்பாகிஸ்தான் மண்ணில் படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் போராட்டக்காரர்கள்எச்சரித்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போராட்டக்காரர்கள், அமெரிக்காதன்னுடைய தாக்குதல்களில் வெற்றியடைய அனுமதிக்கக் கூடாது என்றும் சூளுரைத்துள்ளனர்.
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே நடந்த சண்டையில் 5 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.