முட்டை வாங்கிக் கொடுத்தவரைக் கடித்துக் குதறிய குரங்கு

Subscribe to Oneindia Tamil

தலைஞாயிறு:

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே முட்டை வாங்கிக் கொடுத்து குரங்கிடம் கடிவாங்கியவர் மயக்கமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள கீழக்கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காமராஜ்.

இவர் திருமருகல் என்ற ஊரில் பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த2 குரங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பிறகு அந்தக் குரங்களின் மீது கரிசனம் கொண்ட காமராஜ், அருகில் இருந்த முட்டைக் கடையில் 4 முட்டைகளைவாங்கி அந்தக் குரங்குகளுக்குக் கொடுத்தார்.

அவ்வாறு ஒரு குரங்கு முட்டையை உடைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது, காமராஜ் அதன் அருகில் சென்றுதலையைத் தடவிக் கொடுத்துள்ளார்.

"முட்டைவாங்கிக் கொடுத்து தன்னைப் பிடிக்கப்பார்க்கிறார்" என்று நினைத்ததோ என்னவோ, திடீரென்று அந்தக்குரங்கு வெறிகொண்டு காமராஜின் கையைப் பற்றிக்கொண்டு கடித்துக் குதற ஆரம்பித்தது.

இதைச் சற்றும் எதிர்பாராத காமராஜ் அலறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனாலும் குரங்கு அவரது கையைவிட்டபாடில்லை. பிறகு பஸ்நிலையத்தில் இருந்த பொதுமக்கள் குரங்கை அடித்து விரட்டிவிட்டனர்.

இந்த அதிர்ச்சியில் கையில் ரத்தத்துடன் காமராஜ் மயங்கி விழுந்துவிட்டார். பிறகு பொதுமக்கள் அவரை அருகில்உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மயக்க நிலையுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+