காவிரி பிரச்சனை: ஜெ. அணுகுமுறை தவறு - ராமதாஸ்
சென்னை:
காவிரி பிரச்சனையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சரியான முறையில் அணுகவில்லை என்று பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
காவிரி பிரச்சனையை ஜெயலலிதா சரியான முறையில் அணுகவில்லை. அவர் முதல்வராக இருந்த போது காவிரிபிரச்சனை குறித்து அவர் பிரதமரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த மாதிரி செய்யவில்லை.
கடந்த 1998ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதா பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அப்போதுபா.ஜ.க. மதவாத கட்சியாக தெரியவில்லையா? இப்போதுதான் பா.ஜ.க. மதவாத கட்சியாக தெரிகிறதா? எந்தகட்சியுமே மதவாத கட்சி கிடையாது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் 3வது கூட்டணி அமைந்திருப்பது மக்களில் பெரும்பாலானவர்களுக்குதெரியாது. இந்த கூட்டணியால் எங்கள் வெற்றி வாய்ப்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறினார்.