சென்னையில் மந்தமான வாக்குப் பதிவு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை துவங்கிய வாக்குப் பதிவு மிகவும் மந்தமாகத்தான் நடந்துவருகிறது.
ஒவ்வொரு வாக்காளரும் மொத்தம் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாக்குப்பதிவிற்கும் நிறைய நேரம் பிடித்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஒவ்வொருவரும் ஒருநிமிடத்துக்குள்ளாகவே வாக்களிக்க முடிந்தது.
ஆனால், இம்முறை வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக நேரம் பிடிப்பதாகவும், இதனால்தான்வாக்குப் பதிவு மந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சென்னை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் வாக்குப் பதிவு மிக விறுவிறுப்புடன் நடந்து வருவதாகக்கூறப்படுகிறது.
கிராமங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.
பல கிராமங்களில் அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர் என்று செய்திகள்தெரிவிக்கின்றன.