குடம் கொடுத்த குப்பன் கைது
சென்னை:
செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குப்பன்,வாக்காளர்களுக்கு குடம் கொடுத்து வாக்கு கேட்டதாக கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து280 குடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்றனர். உறுப்பினர் பதவிக்கு 184பேர் போட்டியிடுகின்றனர்.
பல வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவருவதற்காக சிறு சிறு அன்பளிப்புகளை வழங்கி ஓட்டுக் கேட்டனர்.ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குப்பன் இவர்களை மிஞ்சி விட்டார்.
அவரது ஆதரவாளர் பழனி என்பவர் ஒரு பெரிய டிரை சைக்கிளில் எவர் சில்வர் குடங்களை எடுத்துக் கொண்டு,இரவில் வீடு வீடாக சென்று இலவச டெலிவரி செய்து குப்பனுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு கூறி கேன்வாஸ்செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சுயேச்சை வேட்பாளர் சுப்ரமணி என்பவர் ஆர்.டி.ஓ., போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்குபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீஸ் படை பழனியை குடம், கையுமாக பிடித்துவிசாரித்தது.
அப்போது குப்பன் சொல்லித் தான் குடம் கொடுத்ததாக பழனி கூறியுள்ளார். இதையடுத்து குப்பனும், பழனியும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து டெலிவரிக்காக வைக்கப்பட்டிருந்த 280 எவர்சில்வர் குடங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications