4 குழந்தைகளுடன் தீக்குளித்த தந்தை
சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆத்திரமுற்ற கணவன் தனது 4குழந்தைகளுடன் தீக்குளித்தார். ஐந்து பேரும் தற்போது ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே.நகர் குமரன் நகர் பகுதியில் உள்ளவர் துரை. இவருக்கு சாந்தி என்றமனைவியும், கங்கா, வேல்விழி, மணிகண்டன், அய்யம்மாள் ஆகிய நான்குகுழந்தைகளும் உண்டு.
துரை டிரை சைக்கிள் ஓட்டும் வேலையைச் செய்து வருகிறார். ஆனால் சம்பாதிக்கும்பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக அவருக்கும்,சாந்திக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாம்.
இதுபோலவே புதன்கிழமை இரவும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.சண்டையின் முடிவில் சாந்தி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
சாந்தி சென்ற கோபத்தில் இருந்த துரைக்கு, தனது நான்கு குழந்தைகள் மீதும் கோபம்ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலையில், மண்ணெண்ணையை எடுத்து குழந்தைகள் மீதுதெளித்து தீவைத்தார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்துஅவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஐந்து பேரின் உயிரும் ஊசலாடி வருகிறது.