வாஜ்பாயை ஏன் சந்திக்கவில்லை?: கருணாநிதி விளக்கம்
சென்னை:
பேத்தியின் உடல் நிலை ச-ரியில்லாத காரணத்தால் தான் பிரதமர் வாஜ்பாயை சந்திக்க -முடியவில்லை என்று தி-முக தலைவர் கருணா-நிதிகூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் பாரதீய ஜனதாத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை இரவுசென்னை வந்திருந்தார். வியாழக்கிழமை காலை அவர் டெல்லி திரும்பினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணியில் -முக்கியக் கட்சியான தி-முகவின் தலைவர் கருணா-நிதி, வாஜ்பாயைச்சந்திக்கவில்லை. இதுகுறித்து அவ-ரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது பேத்தி உடல்-நிலை ச-ரியில்லாமல் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நலை குறித்து விசா-ரித்துக் கொண்டிருந்ததால், வாஜ்பாயைச் சந்திக்க -முடியவில்லை. ஜனா. கிருஷ்ணமூர்த்தி மகன்திருமணத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை என்றார் அவர்.
அதிமுக அரசு மீது தான் கொடுத்த பல புகார்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கருணாநிதி கடுப்பில் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications