தாக்குதலை நிறுத்த உதவி அமைப்புகள் கோரிக்கை
இஸ்லமாபாத்:
ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடி வரும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு உதவும் பொருட்டு,ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலை சிறிது காலம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 6சர்வதேச தொண்டு அமைப்புகள் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க உதவும் விதமாகஅமெரிக்கா தாக்குதலை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் இன்டர் நேஷனல், பிரிட்டன்இஸ்லாமிக் ரிலீஃப், கிறிஸ்டியன் எய்ட், டியர் ஃபண்ட் மற்றம் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட 6 தொண்டு அமைப்புகள்அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன..
ஆப்கானிஸ்தானில் விரைவில் குளிர்காலம் துவங்கிவிடும். அதற்குள் அர்களுக்கு உணவு பொருட்களை வழங்கவேண்டும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
தற்போது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பட்டினியால்வாடி வரும் மக்களுக்கு உணவு பொருட்களை எங்களால் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியாது. எனவேஅமெரிக்கா சிறிது காலம் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபானின் இயக்குனர் பார்பாராஸ்டாக்கிங் கூறியுள்ளார்.
வரும் குளிர் காலத்தில் ஆப்கானனிஸ்தான் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் அடுத்தமாதத்திற்குள் ஆப்கானிஸ்தானிற்கு 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் தேவை.
கடந்த மாதம் 10 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது என்று அமெரிக்காகூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications